Pages

Saturday, October 20, 2012

நவராத்திரி சப்தமாதர்கள்:-

நவராத்திரி சப்தமாதர்கள்:-

பிராஹ்மி, வைஷ்ணவி மஹேஸ்வரி, கெளமாரி, வராஹி, மஹேந்திரி {இந்திராணி},   சாமுண்டி.




இவர்கள் சப்தமாதர்கள் எனப்படுவர். அம்பிகையின் சக்தி மிகுந்த அம்சங்களான இந்த ஏழு தெய்வ மகளிரும் மயிலாடுதுறைக்கு அருகில் அதைச் சூழ்ந்துள்ள  ஏழுஸ்தலங்களில் சிவபெருமானை வழிபட்டு பூர்ண அருள் பெற்றனர்.




    
பிராஹ்மி- சிவனை இவர் பூஜித்தது திருத்தான்ஹோஜீசம் சுயம்பு நாதர் கோயில்.
பிராஹ்மிக்கு நான்கு முகங்கள். ஆறுகைகள், மஞ்சள் நிறம், அன்னவாகனம்



வைஷ்ணவி:- பூஜித்த ஸ்தலம் பசுபதீஸ்வரம். இவருக்கு ஒருமுகம், ஆறு கைகள்,
நீலநிறம், கருடவாகனம், துளசி மாலை தரித்திருப்பாள்.




மஹேஸ்வரி:- பூஜித்தஸ்தலம் கருணாம்பேட்டை. இவருக்கு ஐந்து முகங்கள் பத்து கைகள், வெள்ளை நிறம், ரிஷிப வாகனம்.




கெளமாரி:- பூஜித்தஸ்தலம், கஞ்சாறு (ஆனந்த தாண்டவம்) 6 முகம், 12 கைகள்,
இளம் சிவப்பு நிறம், மயில் வாகனம்.



வராஹி:- பூஜித்தஸ்தலம் சக்திபுரம், இவருக்கு ஒரு முகம், நான்கு கைகள், கருப்பு
நிறம், எருமைவாகனம்.

இந்திராணி:- பூஜித்த ஸ்தலம், தருமபுரம், ஒருமுகம், நான்கு கைகள், நீல நிறம்,
வெள்ளை யானை வாகனம்.



   நவராத்திரி சமயத்தில்

முதல் நாள்      :    மல்லிகை, வில்வ மாலை சூட்டியும்
     இரண்டாம் நாள்  :    துளசி, மல்லிகை மாலையும்
     மூன்றாம் நாள்   :    மல்லிகை, சம்பங்கி, மரிக்கொழுந்தும்
     நான்காம் நாள்   :    ஜாதி மல்லி மாலையும்
     ஐந்தாம் நாள்    :    பாரிஜாதம், வீபூதிப்பச்சையிலும்
     ஆறாம் நாள்    :    சிவப்பு நிற செம்பருத்தி, அலரிப்பூவிலும்
     ஏழாம் நாள்     :     தாழம்பூ, செவ்வரளியிலும்
     எட்டாம் நாள்    :    ரோஜாப்பூ கொண்டும்
     ஒன்பதாம் நாள்   :    தாமரை, தவனம், மரிக்கொழிந்திலும் மாலைகள்
                         சூட்டி வணங்குதல் வேண்டும்.


ஸ்ரீ துர்ககை துதி


ராஜராஜேஸ்வரி நமஸ்காரம்


லலிதாம்பிகையே நமஸ்காரம்


துர்க்கா லக்ஷ்மியே நமஸ்காரம்




புவனேஸ்வரியே நமஸ்காரம்


அன்னபூர்ணேஸ்வரி நமஸ்காரம்


காமேஸ்வரியே நமஸ்காரம்


பரமேஸ்வரியே நமஸ்காரம்


பக்தியுடன் உன்னை நாடி வந்தோம்-நாங்கள்


பண்புடனே உன்னைப் பார்க்க வந்தோம்.


ஏகாம்பரேஸ்வரி என்றும் நீயே.


ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி


உன்பாதம் தேடி வருவோர்க்கு


அன்போடு அருள்வாயே




 

5 comments:

  1. சப்தமாதர்கள்:-

    சத்தான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..

    ReplyDelete
  2. சிறப்பான பகிர்வுக்கு நன்றி...

    விஜயதசமி வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. மிக்க நன்றி. பணி தொடரட்டும். சிறப்பான படங்கள்

    ReplyDelete
  4. //சப்தமாதர்கள்:-
    சத்தான பகிர்வுகள்..
    பாராட்டுக்கள்..
    வாழ்த்துகள்..//

    அதே அதே ... ததாஸ்து.
    -=-=-=-=-

    //ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி
    உன்பாதம் தேடி வருவோர்க்கு
    அன்போடு அருள்வாயே//

    நல்ல அருமையான வரிகள்.
    -=-=-=-=-=-=-
    படங்களும், பூக்களைப்பற்றி
    எழுதியுள்ளதும் மிகவும் சிறப்பாக
    மணம் பரப்பி மனதைக் கொள்ளை
    கொள்ளச்செய்கிறது.

    நல்லதொரு பதிவு.
    பாராட்டுக்கள்.
    வாழ்த்துகள்.
    பகிர்வுக்கு நன்றிகள்.
    -=-=-=-=-=-=-

    [இதற்கான இணைப்பு
    எனக்கு மெயில் மூலம்
    அனுப்பப்படவில்லை.
    அதனால் தாமதமாக
    நானாகவே
    அகஸ்மாத்தாக
    வருகை தந்துள்ளேன்
    என்பதை அறியவும். ;(]
    -=-=-=-=-=-
    அன்புடன்
    VGK

    ReplyDelete
  5. படங்களும் தகவல்களும் அருமை
    பாராட்டுக்கள்

    ReplyDelete