Pages

Wednesday, February 15, 2012

மஹாசிவராத்திரி.


                     

                                      மஹாசிவராத்திரி.


                             இந்த ஆண்டு 20-02-2012 மஹாசிவராத்திரி.













 


 


 

மஹாசிவராத்திரி சிவாலய ஓட்டம்.
சிவாலய ஓட்டம் என்பது ஒவ்வொரு வருடமும் மஹாசிவராத்திரி அன்று பக்தர்களால் அனுஷ்டிக்கப் படுகிறது. அதாவது ஒரு சிவாலயத்திலுருந்து ஒவ்வொரு ஆலயமாக 12 சிவாலயத்திற்கு ஓட்டமாக ஓடி இறைவனை ஒரே நாளில் தரிசிப்பது.12 சிவாலங்களும் கன்யாக்குமரி மாவட்டத்தில் "பத்மனாபபுரத்தை" சுற்றி 80 கி.மீ. சுற்றளவில் அமைந்துள்ளது.

12 சிவாலயங்கள்  கீழ்க்கணட இடங்களில் அமையப்பெற்றுள்ளன.:--

1.திருமலை சிவா கோவில்

2.திக்குறிச்சி

3.திற்பரப்பு.

4.திரு நந்திக்கரை.

5..பொன்மனை

6.பண்ணிப்பாகம்.

7.கல்குளம்.

8.மலன் கோடு.

9.திருவிடைகோடு.

10.திருவிதாங்கோடு.

11.திருப்பாண்டிக்கோடி.

12.திருனட்டாலம் சிவன் கோவில். ஆயிரக்கணக்கான பக்தர்கள்   வரும் சிவராத்திரியன்று இரவுமுழுவதும் ஓட்டமாக ஓடி ஒவ்வொரு ஆலயதில்
 உள்ள சிவபெருமானை தரிசித்துசிவன் அருள் பெறுவர். நாமும் முடிந்தால் இதில் கலந்து கொள்ளலாம். இயலாவிடில் இந்த சிவத்தொண்டர்களின் அடியினைப் போற்றி வணங்குவோம்.







 



 





சிவனருள் பெற வரலாறு காட்டும் செய்தி:

ஒரு சமயம் காட்டில் புலியொன்று வேடன் ஒருவனைத்துரத்தியது.புலிக்கு பயந்த வேடன் அருகிலுள்ள ஒரு மரத்தில் ஏறிப் பதுங்கினான்.அது ஒரு வில்வமரம்.புலி இடத்தைவிட்டு நகருவதாக இல்லை. இரவும் வந்தது. வேடனும் தன்னை மறந்து தூங்கிவிடாமல் இருக்க மரத்தில் உள்ள இலைகளைப் பறித்து கீழே போட்டுக்கொண்டிருந்தான். மரத்தின் அடியில் ஒரு சிலிங்கம் இருந்திருக்கிறது. இவன் போட்ட வில்வ இலைகள் கீழேயுள்ள சிவலிங்கத்தின் மேல் விழுந்தது! அன்றைய தினம் மஹாசிவராத்திரி தினமாகும்.

விடிய விடிய தூங்காமல்  பட்டினி கிடந்து.மஹாசிவராத்திரி. அன்று சிலிங்கத்திற்கு வில்வத்தில் அர்ச்சனை செய்தமையால் வேடனுக்கு சிவனருள் 
கிடைத்தது ஓர் வரலாற்றுச்செய்தி. மஹாசிவராத்திரி. அன்று சிவதரிசனம் செய்வோம், சிவனருள் பெறுவோம்.





















Sunday, February 12, 2012

விருதின் பெருமை


 விருதின் பெருமை
"லீப் ஸ்டர்" என்ற விருது திருமதி ராஜராஜெஸ்வரி அவ்ர்களால் [மணிராஜ்" வலைத்தளம்] எனக்கு அளிக்கப்பட்டது.
http://jaghamani.blogspot.in/


விருது ஓர் ஊக்கம் தரும் உற்சாக டானிக். முற்றும் துறந்த முனிவரும் கடுமையான தவம் செய்வதின் நோக்கம் அதன் மூலம் ஏதாவது ஒன்றை அடைவதற்குத்தான். விருதினை தருபவர்களுக்கு ஒரு ஆத்ம திருப்த்தி கிடைக்கும் ; அதனை பெறுபவர்களுக்கு மிக்க மகிழ்ச்சியும் மேலும் பல விருதினை அடைவதற்கு உற்சாகத்தினையும் ஊக்கத்தையும் அளிக்கும்.

இணய தளத்தின் மூலம் நல்ல நண்பர்கள் பலர் அமையப்பெற்றது மனத்திற்கு ஆறுதலையும் அளிக்கிறது.






முதன்முதல் வலைஉலகம் பற்றி "துளசி தளம்" தேவதை இதழ் மூலம் அறிந்தேன். திருமதி.துளசி கோபால் அவர்கள் தான் எனக்கு தளத்தில்  தமிழில் எழுத கற்றுக்கொடுத்தார்கள். அவருக்கு எனது முதல் விருதினை அன்புடன் அளிக்கிறேன்.http://thulasidhalam.blogspot.in/



எனக்கு மனஆறுதலை அளிக்கும் முகமாக அவ்வப்பொழுது நல்ல பல சங்கீதங்களை வீடியோ மூலம் தந்து வரும் திரு.வெங்கட் கைலாசம் அவர்களுக்கு   http://myblogkumara.blogspot.in/
இரண்டாவது விருதினை அளித்து மகிழ்கிறேன் .


ஆரம்பத்தில் இடுகையை சரியாக வெளியிடத்தெரியாத நிலையில் எனது தளத்திற்கு வருகை தந்து  "CUTE" என முதல் கருத்தினை இட்டு உற்சாகப்ப்டுத்திய "சித்ரா சாலமன் " கொஞ்சம் வெட்டிபேச்சு   அவர்களுக்கு மூன்றாவதாக விருதினை அளிக்கிறேன். http://www.blogger.com/profile/06018665756362323009




இணைய தளம் குறித்து பலதொழில் நுட்பங்களை வெளியிடும் "பொன்மலர்" அவர்களுக்கு நான்காவது  விருதினை மனமுவந்து அளிக்கிறேன்.  http://www.blogger.com/profile/04898303698495150506



பல பயனுள்ள ஸ்லோகங்களை வெளியிட்டு ஆன்மிக அன்பர்களைக் கவரும் "ஸ்த்தோத்திர மாலா" அவர்களுக்கு ஐந்தாவது விருதினை அளிப்பதில் பெறுமகிழ்வு அடைகிறேன். http://sthothramaalaa.blogspot.in/


எனக்குப் பிடித்தமானவை:
வாசமிகு மலர்ச்செடிகளை வளர்த்தல்

அதில் மலரும் மலர்களை கொய்து இறைவனுக்கு சமர்ப்பித்தல்

வாரப்பத்திரிக்கைகளில் வரும் நல்ல தொடர்களை சேர்த்து பாதுகாத்தல் [சுதா சேஷய்யன் அவர்களின் ஸ்ரீ லலிதா-லலிதா சகஸ்ர நாம விளக்கம், போன்றவை]

மாலை நேரத்தில் சுவாமி ஸ்லோகங்களை கூறுதல்

எளிய உணவுகளை ருசியாக செய்தல்

குழந்தைகளின் மழலையில் மெய்மறந்து மகிழ்தல்


இறுதியாக எனக்கு விருதினை அளித்து உற்சாகப்படுதிதிய திருமதி.ராஜராஜேஸ்வரி அவர்களுக்கு என் நன்றி கலந்த வணக்கத்தினை சமர்ப்பிக்கின்றேன்