Pages

Thursday, August 16, 2012

பிரமிக்க வைக்கும் திருப்பதி அதிசயங்கள்


திருமலை திருப்பதி




எம்பிரானின் அருளோடு எண்ணற்ற அதிசயங்களைத் தன்னுள்ளே அடக்கியது ஏழுமலை எனும் திருப்பதி. மெய்சிலிர்க்கச் செய்யும் அவற்றுள் சில இதோ இங்கே







ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு பச்சைக் கர்ப்பூரம் சார்த்துகிறார்கள்.
இந்த பச்சைக் கர்ப்பூரம் ஒரு ரசாயனம். அரிப்பைக் கொடுக்கும் ஒருவகை அமிலம். இந்த ரசாயனத்தை சாதாரணக் கருங்கல்லில் தரவினால் கருங்கல் வெடித்துவிடும்.பல கோடி ஆண்டுகள் கடந்து இறுகி நிற்கும் சிலா தோரணத்தில் உள்ள பாறைகளில் இதைத் தடவினால் அந்தப் பாறைகள் வெடிப்பதில்லை. ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு 365 நாளும் பச்சைக் கர்ப்பூரம் தடவுகிறார்கள். ஆனாலும் வெடிப்பு ஏற்படுவதில்லை.
     எந்தக் கருங்கல் சிலையானாலும் எங்காவது ஒரு இடத்தில் சிற்பியின் உளிபட்டிருக்கும் இடம் தெரியும். உலோகச் சிலையனாலும் உலோகத்தை உருக்கி வார்த்த இடம் தெரியும். ஏழுமலையான் திருவுருவச்சிலையில் அப்படி எதுவும் அடையாளம் தெரியவில்லை. எந்த கருங்கல் சிலையை எடுத்துக்கொண்டாலும் சுரசுரப்பாக இருக்கும் ஆனால் ஏழுமலையான் திருமேனியில் நுணுக்க வேலைப்பாடுகள் எல்லாம் மெருகு போடப்பட்டது போல் இருக்கின்றன. ஏழுமலையான் விக்ரகத்தில் நெற்றிச் சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் நகைக்கு பாலீஷ் போட்டது போல் பளபளப்பாக இருக்கின்றன.
     ஏழுமலையான் திருவுருவச்சிலை எப்போதும் 150 டிகிரி பாரங்கீட் வெப்பத்தில் இருக்கிறது. திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம் அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர், பால் மற்ரும் திரவியங்களால் அவிஷேகம் செய்கிறார்கள். ஆனால் அபிஷேகம் முடிந்தவுடன் ஏழுமலையானுக்கு வியர்க்கிறது.
பீதாம்பரத்தால் வியர்வையை ஒற்றி எடுக்கிறார்கள். வியாழக்கிழமை அபிஷேகத்திற்கு முன்னதாக, நகைகளைக் கழற்றும் போது ஆபரணங்கள எல்லாம் சூடாகக் கொதிக்கின்றன.



அர்சாமூர்த்தமாக அகிலத்திற்கு அருளும் எம்பெருமான் திருப்பதி ஏழுமலையானின் அமைப்பே ஒரு அதிசயம்தான். திருப்பதி ஆலயத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் “சிலாதோரணம் என்ற அபூர்வ பாறைகள் உள்ளன. உலகத்திலேயே இந்த பாறைகள் இங்கு மட்டும்தான் உள்ளன. இந்தப் பாறைகளின் வயது 250 கோடி வருடம் என்கிறார்கள். ஏழுமலையானின் திருமேனி அமைந்திருப்பதும் இந்தப் பாறைகளுக்கு நிகரானதே

















திருப்பதி ஓவியங்கள் 300 ஆண்டுகள் பழமையானவை.
    வெள்ளிக்கிழமைகளிலும் மார்கழிமாதத்திலும் வில்வ இலை அர்ச்சனைக்கு    உபயோகப் படுத்தப்படுகிறது.












திருப்பதி திருக்கோயிலின் சமையல்கட்டு மிகவும் பெரியதாகும். பொங்கல், தயிர்சாதம், புளியோதரை, சித்ரான்னம், வடை முறுக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், மெளகாரம், லட்டு, பாயசம், தோசை, ரவாகேசரி, பாதம்கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி போன்றவை தினமும் பெரிய அளவில் தயார் செய்யப்படுகின்றன. ஆனாலும் லட்டுவே பிரதானமாக பேசப்படுகிறது.










ஏழுமலையானுக்கு நைவேத்யம் செய்வதற்காக தினமும் ஒரு புதிய மண்சட்டி வாங்குகிறார்கள். இதில் தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்தியமும் கோயில் கர்பக்கிருகத்திற்குக் குலசேகரப் படியைத் தாண்டாது.    வைரம், வைடூரியம், தங்கப் பாதிரங்கள் எதுவும் குலசேகரப்படியைத் தாண்டிச் செல்லாது. ஆண்டவனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட எச்சில் மண்சட்டியும், தயிர்சாதமும் ஒரு பக்தனுக்குக் கிடைக்கப் பெற்றால் அது மிகப் பெரிய பாக்கியமாகும்.



சிவராத்திரி அன்று ஷேத்ர பாலிகா என்ற உற்சவம் நடைபெறுகிறது. அன்று உற்சவப் பெருமானுக்கு வைரத்தில் விபூதி நெற்றிப்பட்டை சாத்தப்பட்டு திருவீதி உலா நடைபெறுகிறது. தாளப்பாக்கம் அன்னமய்யா, ஏழுமலையானை பரப்பிரம்மமாகவும், சிவாம்சம் பொருந்திய ஈஸ்வரனாகவும், சக்தி ஸ்வரூபமாகவும் பாடி, அந்தப் பாடல்களை செப்பேடுகளில் எழுதி வைத்துள்ளார். திருப்புகழ் பாடிய அருணகிரிநாதப் பெருமான் திருப்பதி கோயிலுக்கு வந்திருக்கிறார். அவரும் அன்ன மய்யாவும் சமகாலத்தவர்கள். சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் சிறந்த வித்யா உபாசகர். மந்திர சாஸ்திரம் தெரிந்தவர். நூற்றுக்கணக்கான தெய்வங்கள் மீது பாடியுள்ளார். ஏழுமலையான் மீது சேஷாசல நாமம், வாராளி ராகத்தில் பாடியுள்ளார்.
     அபிஷேசத்தின் போது ஏழுமலையான் தனது மூன்றாவது கண்ணைத்திறக்கிறார் என்ற ஐதிகம் உள்ளது.
     ஏழுமலையானின் ஸ்தல விருட்சம் புளிய மரம்.





வெள்ளிக்கிழமை அபிஷேகத்திற்கு பரிமள அறையில் வியாழன் இரவே அபிஷேகப் பொருட்கள் தயார் செய்யப்படுகிறது. குங்குமப்பூ கலவையும் அபிஷேகத்திக்கு சேர்க்கப்படுகிறது. வெளி நாடுகளிலிருந்து வாசனை திரவியங்கள் பக்தர்கள் அனுப்பிய வண்ணம் உள்ளனர். ஒரு வாரத்திற்கு ரூ.50,000/- மதிப்புள்ள வாசனை திரவியங்கள் வருகின்றன.
     ஏழுமலையான் வாரத்தில் நான்கு நாட்கள் அம்பாளாகவும், 2 நாட்கள் விஷ்ணுவாகவும், ஒரு நாள் சிவனாகவும் கருதப்பட்டு பூஜை நடைபெற்று வந்துள்ளது.
ஏழுமலையானின் அபிஷேக நீர் குழாய் மூலம் புஷ்கரணியில் கலக்கிறது.ஆகவே இது புனிதமான நீராகும். இங்கே குளித்துவிட்டு நீரில் நின்றபடியே இரு கைகளாலும் தண்ணீரை எடுத்து குளத்திலேயே விட வேண்டும்.





ஜரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து பக்குவப்படுத்தப்பட்ட ரோஜா மலர்கள் பக்தர்களால் திருப்பதிக்கு விமானத்தில் அனுப்பி வைக்கப்படுகின்றன. ஒரு ரோஜா மலரின் விலை சுமார் 80 ரூபாய்.
    சீனாவிலிருந்து சீனச்சூடம், அகில், சந்தனம், அம்பர், தக்கோலம், லவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம் போன்ற வாசனைப் பொருட்கள் ஏழுமலையான் திருகோயிலுக்காக அனுப்பப்படுகிறன.
     ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு ரூ.1,000 கோடி இவருடைய நகைகளை வைத்துக் கொள்ள இடமும் இல்லை. சாத்துவதற்கு நேரமும் இல்லை. அதனால் ஆண்டிற்கு ஒரு முறை உபரியாக உள்ள நகைகளை செய்தித்தாள்களில் விளம்பரப்படுத்தி ஏலம் விடுகிறார்கள்.
    ஏழுமலையானின் சாளக்கிராம தங்க மாலை 12 கிலோ எடை உள்ளது. இதை சாத்துவதற்கு மூன்று அர்ச்சகர்கள் தேவை சூரிய சடாரி 5 கிலோ எடை பாதக்கவசம் 375 கிலோ. கோயிலில் இருக்கும் ஒற்றைக்கல் நீலம் போல், உலகில் யாரிடமும் கிடையாது. இதன் மதிப்பு ரூ.100 கோடி.




ஏழுமலையானுக்கு சாத்தப்படுவது, 21 முழ நீளமும் 6 கிலோ எடையும் கொண்ட புடவை பட்டுப் பீதாம்பரமாகும். இந்த ஆடையை கடையில் வாங்க முடியாது. திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில் 1,25,000 ரூபாய் செலுத்த வேண்டும். வாரத்தில் ஒருமுறை வெள்ளிக்கிழமை அன்று மட்டும்தான் வஸ்திரம் சாத்துவார்கள். இது மேல் சாத்து வஸ்திரம்.  பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டும்.
    உள் சாத்து வஸ்திரம் ஒரு செட் இருபதாயிரம் ரூபாய் கட்டணமாகும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் சாத்துவதற்கு சமர்ப்பிக்க்கப்படும் பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு பத்து வருடங்கள் காத்திருக்க வேண்டும்.
     பக்தர்கள் சமர்ப்பிக்கும் வஸ்திரங்கள் தவிர அரசாங்கம் சமர்ப்பிக்கும் சீர் வஸ்திரங்கள் ஆண்டுக்கு இரண்டு முறை சாத்தப்படுகிறது.




ஏழுமலை ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்ய இன்று கட்டணம் செலுத்தினால் மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.
    அபிஷேகத்திற்காக ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்திலிருந்து கஸ்தூரி, சைனாவிலிருந்து புனுகு, பாரிஸ் நகரதிலிருந்து வாசனை திரவியங்கள் முதலிய உயர்ந்த பொருட்கள் வரவழைக்கப்பட்டு, தங்கத்தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்படும். 51 வட்டில் பால் அபிஷேகம் செய்யப்படும். பிறகு கஸ்தீரி சாத்தி, புனுகு தடவப்படும், காலை 4.30 மணி முதல் 5.30 மணிவடை அபிஷேகம் நடைபெறுகிறது. அபிஷேகத்திற்கு சுமார் ஒரு லட்ச ரூபாய் செலவு ஆகும்.



திருமலையின் புனிதத்தன்மை கருதி எந்த ஆங்கிலேயரும் மலை ஏறவில்லை. ஆங்கிலப்பாதிரிகள் மலையில் எதாவது ஒரு பகுதியில் ஒரு சிலுவைநட விரும்பினார்கள். ஆனால் அதற்கு ஆங்கிலேயத் தளபதிகளே அனுமதி அளிக்கவில்லை. திருமலை திருக்கோயிலில் நித்யபடி பூஜைகள் நடக்க வேண்டும் என்று ஆங்கிலேயர்கள்  விரும்பினார்கள். பூஜைகள் சரிவர நடக்காவிட்டால் தங்கள் ஆட்சிக்கு பங்கம் வரும் எனக் கவலைப்பட்டார்கள்


திருப்பதி அலர்மேல் மங்கைக்கு உள் பாவாடை கத்வால் என்ற ஊரில் பருத்தியில் தயார் செய்யப்படுகிறது. செஞ்சு இனத்தைச் சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தி யுடன் நெய்கிறார்கள். பாவாடை சீமாட்டியின் திருமேனியில் படுவதால், இதை நெய்யும் போது நெசவாளர்கள் மூன்று வேளை குளிப்பார்கள் அவர்கள் மது, மாமிசம் உண்ணமாட்டார்கள்.




திருமலை திருக்கோயிலில் 1180 கல்வெட்டுகள் உள்ளன. அவற்றுள் 236 பல்லவ, சோழ, பாண்டியர் காலத்தவை. 169 கல்வெட்டுகள் சாளுவ வம்ச மன்னர்கள் காலத்தவை. 229 கிருஷ்ண தேவராயர் காலத்தவை. 251 அச்சுதராயர் காலத்தவை. 147 சதாசிவராயர் காலத்தவை. 135 கொண்டை வீடு அரசர் காலத்தவை.நந்திவர்மன் (பல்லவர்) ஆண்ட கி.பி. 830 தொடங்கி 1909 ஆண்டு வரை கல்வெட்டுகள் உள்ளன. கல்வெட்டுகளுள் 50 கல்வெட்டுகள்தான் தெலுங்கு கன்னட மொழிகளில் உள்ளன. மீதம் 1130 கல்வெட்டுகள் தமிழில்தான் உள்ளன.
                ------------நன்றி------------- 
                        [ ஸ்ரீ இருங்கோவேள்] குமுதம் பக்தி ஸ்பெஷல்
      ஆகஸ்ட் 16-31, 2012
பல ஆண்டுகளுக்கு முன் திருப்பதி பெருமாளின் அபிஷேகக் காட்சி தரிசியுங்கள் 

பத்மா சூரி 



25 comments:

  1. எண்ணற்ற அதிசயங்களைத் தன்னுள்ளே அடக்கியது ஏழுமலை எனும் திருப்பதி. மெய்சிலிர்க்கச் செய்யும் அற்புதப்பகிர்வுகளுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. [ma]பாராட்டுகளுக்கு மனம் நிறைந்த நன்றி.[/ma]
      [im]http://assets2.desktopnexus.com/thumbnails/1142637-thumbnail.jpg[/im]

      Delete
  2. பிரமிக்க வைக்கும் படங்கள். ;)))))
    பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. [im]http://1.bp.blogspot.com/_UClPlG6BibQ/S-Y1sEjMmAI/AAAAAAAAAuo/-uXpXTnGFmo/s1600/rain_flower.jpg[/im]

      Delete
    2. பூப்படத்தின் மூலம் பூப்போன்ற தங்களின் மனதை நன்கு அறிய முடிகிறது. மிகவும் சந்தோஷம், மேடம்.

      Delete
  3. பிரமிக்க வைக்கும் தகவல்கள். ;)))))
    பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. [im]http://www.bristol.k12.sd.us/images/flower%20animation.gif [/im]

      Delete
    2. பிரமிக்க வைக்கும் தகவல்கள். ;)))))
      பாராட்டுக்கள்.

      என்று நான் கமெண்ட் கொடுத்தால் மீண்டும் தாங்கள் பதிலுக்கு ஒரு பெரிய கண்ணைப்பறிக்கும் படமாகக்கொடுத்து, மீண்டும் என்னை பிரமிக்க வைத்து விட்டீர்களே!!

      மீண்டும் அதற்கும் பாராட்டுக்கள்.

      [போகும் போக்கைப்பார்த்தால் நம் தோழி அவர்களையே நீங்கள் மிஞ்சி விடுவீர்கள் போலத் தோன்றுகிறது. ;)))))]

      Delete
  4. அற்புதமாக பழமை வாய்ந்த அபிஷேகக் காணொளி. ;)))))
    நன்றியோ நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. [im]http://www.animateit.net/data/media/4/on_the_flower.gif[/im]

      Delete
    2. அடடா! இதிலும் ஓர் அழகான பூ. அதன் மேல் ஓர் பட்டாம்பூச்சி பறப்பதாக அனிமேஷன். சூப்பர் தான்! ;)))))

      Delete
  5. [im]http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcRBEBprsH_4r_6qaDUJRrBB63EWunprq2tSKscgppQKsZEJrBEyy5bmbA[/im]

    [ce]நன்றி! நன்றி![/ce]

    ReplyDelete

  6. //திருப்பதி அலர்மேல் மங்கைக்கு உள் பாவாடை கத்வால் என்ற ஊரில் பருத்தியில் தயார் செய்யப்படுகிறது. செஞ்சு இனத்தைச் சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தி யுடன் நெய்கிறார்கள். பாவாடை சீமாட்டியின் திருமேனியில் படுவதால், இதை நெய்யும் போது நெசவாளர்கள் மூன்று வேளை குளிப்பார்கள் அவர்கள் மது, மாமிசம் உண்ணமாட்டார்கள்.//

    ஆச்சர்யம் அளிக்கும் இரகசியத்[உள்பாவாடை போன்றே] தகவல்கள் ... ;)))))

    ReplyDelete
    Replies
    1. [im]http://fc01.deviantart.net/fs71/f/2010/251/7/e/silly_little_flower_animation_by_cartunegirl56-d2yb4bh.gif[/im]

      Delete
    2. பூத்துப்பூத்து மறையும் பூச்செடி ..... பஹூத் அச்சா ஹை!
      VGK

      Delete
  7. //ஆண்டவனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட எச்சில் மண்சட்டியும், தயிர்சாதமும் ஒரு பக்தனுக்குக் கிடைக்கப் பெற்றால் அது மிகப் பெரிய பாக்கியமாகும்.//

    இந்த அபூர்வத்தகவல்கள் [நம் தகவல் களஞ்சியமாம் திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களும் ஏற்கனவே ஓர் பதிவினில் சொல்லியிருந்தார்கள்] தங்கள் மூலமும் மீண்டும் ஒருமுறை தெரிந்து கொண்டதும் நான் செய்த மிகப்பெரிய பாக்கியமாகும் தான்.

    எல்லாவற்றிற்கும் என் அன்பான பாராட்டுக்கள். மனமார்ந்த வாழ்த்துகள். நன்றியோ நன்றிகள். அன்புடன் vgk

    ReplyDelete
    Replies
    1. "எல்லாவற்றிற்கும் என் அன்பான பாராட்டுக்கள். மனமார்ந்த வாழ்த்துகள். நன்றியோ நன்றிகள். அன்புடன் vgk"

      பாராட்டுகளுக்கு நன்றி. பிரசாதம் எடுத்துக்கொள்ளுங்க!
      [im]http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcSM0tb9qNqQv3rFdrCQ5dFJbMroq_hiEzib-OTFxQMoMdDpM7Wh9jFjjWk[/im]

      Delete
    2. ஆஹா! தட்டு நிறைய லட்டுக்கள் !! சூப்பர்.

      நீங்கள் கணினியில் ஏதேதோ புதுமைகள் செய்து அசத்துகிறீர்கள். மிகவும் சந்தோஷமாக உள்ளது.

      பின்னூட்டம் ஒவ்வொன்றுக்கும் படத்துடன் பதில் தருவது எனக்கு ஆச்சர்யமாகவும் அதிசயமாகவும் உள்ளது, மேடம்.

      உடனே உங்களிடம் ஓடிவந்து கற்றுக்க்கொள்ள வேண்டும் என ஆசையாக உள்ளது.

      அன்புடன் VGK

      Delete
  8. அருமையான செய்திகள் திருமலை திருக்கோவில்பற்றி.
    ஏழுமலையான் அபிஷேக காட்சி எல்லாம் தந்து மனசை அவன் பால் நிலைக்க செய்து விட்டீர்கள்.
    நன்றி, நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் அன்புக்கு நன்றி!

      [im]http://1.bp.blogspot.com/-6l7IwBPtS7s/ToURnAOvADI/AAAAAAAAD2E/qGOFiuZsuBI/s640/india+village+deviyar+illam.jpg[/im]

      Delete
  9. மதேஸ்வரன் மதுரை
    எனது மற்றொறு தளமான மாதேஸ்வரன் மதுரையில் உள்ள கோளாரினை இன்றுதான் சரி செய்தேன்.தொடர்ந்த ஆதரவிற்கு என் நன்றிகள். பத்மா பார்க்க பத்மா

    ReplyDelete
  10. நான் வரிசையாக 7 அல்லது 8 கமெண்ட் கொடுத்தேனே!
    மற்றவைகள் கணினி கோளாறினால் காணாமல் போய் விட்டனவா?
    தயவுசெய்து SPAM இல் போய் தேடிப்பாருங்கள் மேடம்.
    vgk

    ReplyDelete
    Replies
    1. [im]http://th684.photobucket.com/albums/vv205/n1ccademus/smilely/SMILEY_1/th_thblue_1_text.gif[/im]

      அத்தனை கமெண்டுகளையும் தேடி போட்டடுவிட்டேன். தங்களின் ஆதரவிற்கு மனம் கனிந்த நன்றிகள்

      Delete
    2. மனமார்ந்த நன்றிகள், மேடம்.

      நான் பல்வேறு சூழ்நிலைகளிலும், குடும்பப்பொறுப்புகளிலும், வெளியே செல்ல வேண்டிய நிர்பந்தமான அலைச்சல்களிலும், எப்போதும் ஏதாவது சிந்தனைகளிலும் மூழ்கி இருக்க நேர்வதால், என்னால் என் டேஷ்போர்டு பக்கமெல்லாம் போய் புதிய பதிவுகளைப்பற்றியெல்லாம் பார்க்க முடிவதில்லை.

      அதனால் தங்களின் பதிவுகள் வெளியிடும்போது அதன் இணைப்பை [லிங்க்] மட்டும் மெயிலில் அனுப்பினால் நான் உடனடியாக வருகை தர ஏதுவாகும். கட்டாயம் ஏதும் இல்லை. தங்கள் விருப்பம் போலச் செய்யவும்.

      அன்புடன்
      vgk [ valambal@gmail.com ]

      Delete
    3. மிகவும் நல்லது. நன்றியோ நன்றிகள்.

      இப்போது வெளிநாட்டிலிருந்து என் பேத்தியும், பேரனும் வந்துள்ளார்கள். இந்த மாதம் முழுவதும் இங்கு தான் என்னுடன் இருப்பார்கள். எனவே நான் அவ்வப்போது மட்டும் பதிவுகள் பக்கம் வருவேன். தவறாக நினைக்க வேண்டாம்.

      அன்புடன் vgk

      Delete