Pages

Saturday, August 11, 2012

பல் படுத்தும் பாடு

                                                           நாம் நம் உடலில்உண்டாகும் எந்த வலியையும் தாங்கிக் கொள்ளலாம். ஆனால் பல் வலியை மட்டும் தாங்க முடியாது. மற்ற உறுப்புகள் வலிக்கும் போது பல்லைக் கடித்து கொண்டு பொறுத்துக்கொள்ளலாம் ஆனால் பல்லே வலிக்கும் போது ? (  !  )
          


                                     நாங்கள் திரு நெல்வேலியில் வசித்த போது இப்படிதான் என் கணவர் அவர்கள் அலுவக நண்பர்களுடன் அருகாமையில் உள்ள குற்றாலத்திற்கு சென்றார். நெல்லையைச் சுற்றி பல சுற்றுலாத்தலங்கள் உள்ளன.நெல்லையை மையமாகக் கொண்டு கிழக்கில் இருந்து பார்த்தோமானால் திருச்செந்தூர் செல்லும் வழியிலேயே புகழ் பெற்ற ஸ்ரீவைகுந்தம்,கிருஷ்ணவரம் சிற்பங்கள் நிறைந்த கோயில்

                                நவக்கைலாசங்கள்,நவதிருப்பதி கோயில்கள்,தெற்கே கன்னியாகுமரி,எழில்மிகு தானுமாலய ஸ்வாமி அமைந்துள்ள சுசீந்தரம் நாகர் கோயில்,ஆசியாவிலே உயரமான மாத்தூர் தொட்டிபாலம்,திற்பிரப்புநீர்விழ்ச்சி  பேச்சிப்பாறைஅணை,தென்மேற்கே [SILENT VALLEY]எனப்படும் களக்காடு,பாயிற்கு புகழ் பெற்றபத்தமடை,அப்பளத்திற்கு பெயர் போன     கல்லிடைக்குறிச்சி,மணிமுத்தாறுஅணை,பாபநாசம்,பாணதீர்த்தம்அகத்தியர்அருவி,மேற்கே குற்றாலம்,வடமேற்கே  சங்கரன்கோவில்,திருவில்லிபுத்தூர் வடக்கே மணக்கும் மீனாட்சி ளும்மதுரை எண்ணற்ற சுற்றுலாத் தலங்கள் மற்றும் ஆன்மீகத்தலங்கள் உள்ளன.

சரி நாம் கதைக்கு வருவோம்



குற்றால அருவி + குற்றால நாதர் கோவில் 

      குற்றாலம் ஒரு அருமையான இயற்கை கொஞ்சும் ரம்மியமான பசுமை மலைகள் சூழ்ந்த சொர்க பூமி. மே மாதம் தொடங்கி,செப்டம்பர் வரை அனைத்து அருவிகளிலும் மூலிகை நீர் கொட்டும் அழகே அழகு. குற்றாலச் சாரலில் திளைப்பது அருவிகளில் குளிப்பதைப் போல சுகமானது.
பொதுவாக நெல்லை வாழ் மக்களுக்கு சாரல் சீசன் தொடங்கும்போதே இங்கு தெரிந்து விடும். பொதிகைமலையின் குளிர்ந்த காற்று சிறுசாரலுடன் வரும். வானம் மப்பும் மந்தரமுமாக இருக்கும். சீசனின் ஆரம்பகாலத்தில் சிலசமயம் கற்கள் அடித்து வரப்படும். அந்நேரத்தில் அருவிகளில் குளிப்பது மிகுந்த ஆபத்தினை உருவாக்கும்.







           இவர் சென்ற சமயம் அருவிகளில் பெரு வெள்ளம் விழாத சமயம் தான். ஐயா அருவியில் தலையை விட்டு குளியிலை அனுபவித்ததோடு நில்லாமல் தலையை மேலே தூக்கி வாய் பிளந்து அருவி விழும் அழகை ரசித்திருக்கிறார். திடீரென்று வாய்க்குள் வலிக்கவே அருவியை விட்டு வெளியே வந்து பார்க்கும் போது ஒரு பல்லைக் காணோம்.மற்றோருபல் ஆடிக்கொண்டிருந்திருக்கிறது. அருவியின் அழகை வாய் பிளந்து ரசிக்கும் போது,நீருடன் ஏதோ சிறுகல் வேகத்துடன் பல்லில் பட்டுத் தெறித்திருக்கிறது


               பிறகென்ன ஒருவாறு முக்கிமுனகி வீடு திரும்பினார்.பல்லில் பயங்கரவேதனை.வலியைப் போக்க என்ன கைவைத்தியம் செய்தும் பயனில்லை. அதனால் பல் மருத்துவரிடம் சென்று காண்பித்தார். அவர் சென்ற மருத்துவர் மருத்துவக் கல்லூரியின் விரிவுரையாளர்.அவரிடம் விஷயத்தைக் கூறியதும், அவர் நன்கு பரி சோதனை செய்து, ஆடும் பல்லை எடுக்க வேண்டும்






எனக்கூறியதுடன், அந்த அறையில் இருந்து சிலரை அருகில் கூப்பிட்டு  வாயை மூடமுடியாதபடி கருவியில் பிடித்தபடி
"ஸ்டூடண்ட்ஸ்! திஸ் ஈஸ் ரூட்திஸ் ஈஸ்  கேவிடி" என்று  திறந்த வாயினுள் விரிவாக பாடம் நடத்த ஆரம்பித்து விட்டார்.



அவர்  வலிதாங்காமல் ! ! என்று முனக, வாய் விட்டு கத்தவும் முடியவில்லை ! பசங்களுக்கு நன்கு புரிந்த பின் தான் வாயை மூட விட்டார்.
ஹும் ! கொடுமை தாங்காமல் கோவிலுக்கு போனால் அங்கு இரண்டு கொடுமை ஜிங் ஜிங் என்று ஆடிய கதை தான்!.

                                                                                           பத்மாசூரி, 




7 comments:

  1. கொடுமை தாங்காமல் கோவிலுக்கு போனால் அங்கு இரண்டு (பல்) கொடுமை ஜிங் ஜிங் என்று ஆடிய கதை !!

    ReplyDelete
    Replies
    1. எப்படியோ, கதை பிடித்திருந்தால் சரி!

      [im]http://i399.photobucket.com/albums/pp75/mesyamsul82/thankyousmiley.gif[/im]

      Delete
  2. http://gopu1949.blogspot.in/2011/01/1.html
    பல்லெல்லாம் பஞ்சாமியின் பல்லாகுமா?
    தயவுசெய்து படித்துப்பாருங்கள்.

    நகைச்சுவை சிறுகதை பகுதி1 முதல் 8 வரை மட்டுமே. முதல் பகுதியின் லிங்க் மேலே கொடுத்துள்ளேன்.

    தங்களின் பல் படுத்தும் பாடு, சுருக்கமாகவும் உருக்கமாகவும் எழுதப்பட்டுள்ளது. பாராட்டுக்கள்.
    அன்புடன் vgk

    ReplyDelete
    Replies
    1. [im]"பல்லெல்லாம் பஞ்சாமியின் பல்லாகுமா?
      தயவுசெய்து படித்துப்பாருங்கள்."
      படித்துவிடடு தங்கள் பதிவிற்கு வருகிறேன்!
      http://www.youtube.com/watch?feature=player_embedded&v=ytdLFjDFEdM[/im]

      Delete
    2. பல்லெல்லாம் பஞ்சாமியின் பல்லாகுமா?
      தயவுசெய்து படித்துப்பாருங்கள்."
      படித்துவிடடு தங்கள் பதிவிற்கு வருகிறேன்!
      [im]http://www.youtube.com/watch?feature=player_embedded&v=ytdLFjDFEdM[/im]

      Delete
  3. அவர் வலிதாங்காமல் ஆ ! ஆ! என்று முனக, வாய் விட்டு கத்தவும் முடியவில்லை ! பசங்களுக்கு நன்கு புரிந்த பின் தான் வாயை மூட விட்டார்.
    ஹும் ! கொடுமை தாங்காமல் கோவிலுக்கு போனால் அங்கு இரண்டு கொடுமை ஜிங் ஜிங் என்று ஆடிய கதை தான்!.//

    நல்ல கொடுமை. பல் எடுத்து பின் பல் கட்டினாரா அல்லது வேறு டாகடரிடம் ஓடினாரா!

    ReplyDelete
  4. பல் கட்டியபின் ஓடினார்!!!!!
    [தங்களின் "E-mail" தெரிவித்தால் நல்லது]{padmasury007@gmail.com}
    [im]http://1.bp.blogspot.com/_-5Cl9WHU-Uo/TJb3M1sx1DI/AAAAAAAAQgY/1lXAovPy1OY/s400/Water_Color_on_glass_07.jpg[/im]

    ReplyDelete